மாணவர்களே தயார்.. தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் பொதுத்தேர்வு!

Published by
பாலா கலியமூர்த்தி

10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1 முதல் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்ததை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. அதன்படி 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெற்றது.

இதனிடையே, எவ்வித புகாருக்கும் இடம் தராமல் 10,11 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்வு அலுவலர்கள், ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா அறிவுறுத்தி இருந்தார். மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மறுபக்கம், தேர்வு மையங்களை அமைக்கும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மே 5ல் தொடங்கவுள்ள, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாநில முழுவதும் 26.76 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வானது வருகிற 5ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 30ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

5 hours ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

6 hours ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

7 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

8 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

8 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

9 hours ago