மாணவர்களே தயார்.. தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் பொதுத்தேர்வு!

Published by
பாலா கலியமூர்த்தி

10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1 முதல் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்ததை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. அதன்படி 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெற்றது.

இதனிடையே, எவ்வித புகாருக்கும் இடம் தராமல் 10,11 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்வு அலுவலர்கள், ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா அறிவுறுத்தி இருந்தார். மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மறுபக்கம், தேர்வு மையங்களை அமைக்கும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மே 5ல் தொடங்கவுள்ள, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாநில முழுவதும் 26.76 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வானது வருகிற 5ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 30ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

27 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

30 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago