திருவாரூர் அருகே வீட்டின் பின்புறம் உள்ள வயலில் மௌனிகா எனும் 17 வயது மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு.
திருவாரூரிலுள்ள மாவட்டமாகிய மகிழஞ்சேரியில் வசித்து வரும் செந்தில் குமாரின் 17 வயது பள்ளி பயிலும் மகள் தான் மௌனிகா. கிராம மக்கள் காலையில் வயலுக்கு சென்ற பொழுது மௌனிகா வயலில் சடலமாக கிடந்துள்ளார்.
அப்பொழுது ஆராய்ந்ததில் உடலில் காயங்களுடன் அவர் இறந்து கிடந்ததை அறிந்த மக்கள் வீட்டினருக்கு தகவல் அளித்துள்ளனர். இது அறிந்து அங்கு வந்த மௌனிகாவின் தந்தை செந்தில் குமார் காயங்களுடன் மகள் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், போலீசார் காயங்களுக்கான காரணம் மற்றும் தடயங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றதோடு, வழக்கு தொடர்ந்தும் உள்ளனர். சிறுமி காயங்களுடன் வயல் வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…