நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா முன் ஜாமீன் கோரி உயர்நீதி மன்றத்தில் மனு !

Default Image

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் இருந்து வருகிறது. இதனால் நீட் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களின் மருத்துவ படிப்பு வெறும் கனவாகி போய்  விடுகிறது. இந்நிலையில் தேனீ மருத்துவ கல்லூரியில் தேர்வெழுதிய மாணவனின் மதிப்பெண்களை பயன்படுத்தி சென்னையை சேர்ந்த உதித் சூர்யா எனும் மாணவர் கல்லூரியில் சேர்ந்து மருத்துவ படிப்பை பயின்று வந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்திருப்பதை கண்டறிந்தனர். மேலும் 5000க்கும் மேற்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களும் தற்போது சரி பார்க்க பட்டு வருகின்றன.

இந்நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பித்த உதித் சூர்யா தலைமறைவானார். இவரை போலீசார் தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வந்தனர்.இதையடுத்து மாணவர் உதித் சூர்யா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்