பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில், தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்துக என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நெஞ்சை கனமாக்கும் இரு செய்திகள்.உளுந்தூர்பேட்டை – மேட்டுநன்னாவரம் கிராமத்து விவசாயி ஆறுமுகத்துக்கு மூன்று மகள்கள். வசதி இல்லாததால் மூவருக்கும் சேர்த்து ஒரே செல்போன் வாங்கித் தந்துள்ளார். ஒரே நேரத்தில் மூவருக்கும் வகுப்புகள் எனில் யார் பயன்படுத்துவது? இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூத்த மகள் நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார் .ஆலங்குடி – கபளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா, நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்திருக்கிறார்.
நீட் தேர்வை பலிபீடம் என்பதும், அனைவருக்குமானது அல்ல ஆன்லைன் வகுப்புகள்’ என்பதும் இதனால்தான்.
ஆன்லைன் வகுப்புகளை அறிவிக்கும் முன் அனைவருக்கும் ஆண்ட்ராய்டு செல்போன் இருக்கிறதா? ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் என்றால் தனித்தனியாக இருக்கிறதா ? தடையற்ற இணையம் இருக்கிறதா ? இணையத்துக்கு மாதம் தோறும் செலவு செய்யும் வசதி இருக்கிறதா – என எது குறித்தும் கவலைப்படாமல் அரசு அறிவித்ததால் ஏற்பட்ட மரணம் தான் நித்தியஸ்ரீயின் மரணம்.
கல்வி என்பது பட்டம் பதவிகளுக்கானது அல்ல; சம வாய்ப்பை வழங்காத எந்தக் கல்வியும் ஏற்றத்தாழ்வையும் விரக்தியையுமே விதைக்கும்.இதைச் சொல்வதால் ஆன்லைன் வகுப்புகளை எதிர்ப்பதாக பொருள் சொல்ல வேண்டாம். பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளில் சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு நடத்துங்கள் என்றே சொல்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…