மாணவி பிரதீபா உயிரிழந்த விவகாரம்…! வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published by
Dinasuvadu desk

விஸ்ரா ஆய்வில் இதயவால்வு பிரச்சினையில் அடைப்பு ஏற்பட்டு பிரதீபா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் பிரதீபா. இவரது சொந்த ஊர் வேலூர், இதனால், பெரம்பூரில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ   மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பிரதீபா பணியாற்றி வந்தார். வீட்டிற்கு போக அனுமதி இல்லாததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியிலேயே தங்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ,கடந்த மே 1-ம் தேதி விடுதியில் மாணவி பிரதீபா மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தற்கொலையா..? அல்லது  கொரோனாவால் உயிரிழந்தார..?என பல கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக போலீசார்  விசாரணை நடத்தி வந்தனர்.

பிரதீபா  உடலை பிரதே பரிசோதனை செய்ததில் விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை எனவும், கொரோனா தொற்றும்  இல்லை என அறிக்கை வந்தது. இந்நிலையில் அவரது உடல் பாகங்கள் விஸ்ரா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த சோதனை முடிவுகள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஸ்ரா ஆய்வில் இதயவால்வு பிரச்சினையில் அடைப்பு ஏற்பட்டு பிரதீபா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது என கூறினர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

அந்த படத்தை பார்த்து தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ வாய்ப்பு கொடுத்தாரு! மனம் திறந்த பூஜா ஹெக்டே!

அந்த படத்தை பார்த்து தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ வாய்ப்பு கொடுத்தாரு! மனம் திறந்த பூஜா ஹெக்டே!

சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…

36 minutes ago

கும்பமேளா கூட்டநெரிசல் : ‘ அவ்வளவு பெரிய சம்பவம் இல்லை ‘ பாஜக எம்பி ஹேம மாலினி பேச்சு!

அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…

1 hour ago

டி20-யில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி! ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுத்த இந்திய அணி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…

2 hours ago

இந்தியாவின் முதல் 3டி-ஸ்டார் தொழில்நுட்பம்! Vivo V50 போனின் சிறப்பு அம்சம்!

டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…

3 hours ago

10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்., 12 கோடி கழிவறைகள்., பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

4 hours ago

தொடங்கியது இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்! கடும் போக்குவரத்து நெரிசல்!

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…

4 hours ago