மாணவி பிரதீபா உயிரிழந்த விவகாரம்…! வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published by
Dinasuvadu desk

விஸ்ரா ஆய்வில் இதயவால்வு பிரச்சினையில் அடைப்பு ஏற்பட்டு பிரதீபா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் பிரதீபா. இவரது சொந்த ஊர் வேலூர், இதனால், பெரம்பூரில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ   மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பிரதீபா பணியாற்றி வந்தார். வீட்டிற்கு போக அனுமதி இல்லாததால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியிலேயே தங்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ,கடந்த மே 1-ம் தேதி விடுதியில் மாணவி பிரதீபா மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தற்கொலையா..? அல்லது  கொரோனாவால் உயிரிழந்தார..?என பல கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக போலீசார்  விசாரணை நடத்தி வந்தனர்.

பிரதீபா  உடலை பிரதே பரிசோதனை செய்ததில் விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை எனவும், கொரோனா தொற்றும்  இல்லை என அறிக்கை வந்தது. இந்நிலையில் அவரது உடல் பாகங்கள் விஸ்ரா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த சோதனை முடிவுகள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஸ்ரா ஆய்வில் இதயவால்வு பிரச்சினையில் அடைப்பு ஏற்பட்டு பிரதீபா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது என கூறினர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

15 minutes ago
அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

60 minutes ago
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

16 hours ago
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

17 hours ago
மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

18 hours ago