ஆபத்தான அந்த நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் விரைந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ராமாதாஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மாணவர் நவீன் உயிரிழப்பை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமாதாஸ் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார் என்பதையறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் கியெவ் மற்றும் கார்கிவ் நகரிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேற முடியவில்லை என்று செய்திகள் வெளிவருகின்றன. ஆபத்தான அந்த நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் விரைந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…