ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி – தந்தை உயிரிழப்பு

Default Image

கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு. 

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ்  மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், மாணவியின் தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கத்தில் இருந்த நிலையில், அவருக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டுள்ளது. இதனையயடுத்து உறவினர்கள் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்