சென்னையில் வேன் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு விடுமுறை.
சென்னை வளசரவாக்கத்தில் வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் மோதி மாணவர் உயிரிழந்த பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்று அம்பத்தூர் வருவாய்த்துறை அதிகாரி இளங்கோவும் விபத்து ஏற்பட்ட பள்ளியில் விசாரணை நடத்துகிறார். மேலும், விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்தி வரும் நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனிடையே, பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…