களத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்…!!! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி…!!!
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரசியல் கட்சியினர், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்கள், ரெயில் மறியல் உள்ளிட்டவற்றை தினமும் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நமணசமுத்திரம் அருகே லெணாவிலக்கில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து திடீரென கல்லூரி முன்பு அமர்ந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திடக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தையொட்டி பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்