கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்!

கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் மே-31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக பிரத்யேகமாக ஒரு இணைய லிங்க் மற்றும் தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.