அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ள நிலையில் கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளின் விவரங்கள் இன்று தேர்ந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2020-2021ம் ஆண்டிற்கான அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைப்பெற்றது.
தமிழகத்தில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் 95ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாகியுள்ள நிலையில், கல்லூரியில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கைக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று கல்லூரியில் சேர்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், இமெயில் வாயிலாகவும் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகளையும் , கட்டண விவரங்களையும் அந்தந்த கல்லூரிகளின் வாயிலாக தெரிவிக்கப்படவுள்ளது.
அதனையடுத்து முதற்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில் ஆகஸ்ட் 28-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையும், அதற்கு மறுநாள் (ஆகஸ்ட் 29) முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறவுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…