ஸ்ட்ராங் ரூம்னா உண்மையான ஸ்ட்ராங் ரூமா இருக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. வருகின்ற மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், கண்டைனர் லாரிகள் அடிக்கடி வந்து செல்வதாகவும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஸ்ட்ராங் ரூம் என்பது உண்மையான ஸ்ட்ராங் ரூமாக இருக்க வேண்டும் எனவும் அடிக்கடி சிசிடிவி கேமரா துண்டிக்கப்படுவதும், கண்டெய்னர் லாரிகள் வந்து செல்வதும், wi-fi வசதிகள் மர்மமான முறையில் இருப்பதும், மர்ம நபர்களின் நடமாட்டம் அடிக்கடி இருப்பதும் ஆகிய சில சந்தேகம் எழுப்பி வருகிறது.
எனவே அங்கு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் நியாயமாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனும் நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாக வேண்டும் எனவும் கமல் அவர்கள் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே ஓட்டு செலுத்தக்கூடிய மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தற்போது இது போன்ற சந்தேகம் எழுந்தால் மக்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் எனும் தன்மை குறைந்துவிடும். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும்.
அதுமட்டுமல்லாமல் ஓட்டு எண்ணும் மையங்களின் அருகே அறிவிக்கப்படாத கட்டட பணிகள் துவங்குவதும், திடீரென மாணவர் நடமாட்டம் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே தங்களுக்கு நிறைய புகார்கள் வந்து கொண்டிருப்பதால் இதனை திரட்டி கொண்டு வந்து வைப்போம் எனவும், இது தங்களது ஜனநாயகத்தைக் காக்கும் முயற்சிகளில் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…