6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியராக உள்ள சௌந்தரராஜன். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பேராசிரியர் சௌந்தரராஜன் குறைவான மதிப்பெண்களை வழங்கியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பேராசிரியர் வெளியிடவில்லை எனவும் வாய்மொழியாக தெரிவித்ததாக குற்றச்சாட்டினர்.
இதனால், தனது மதிப்பெண்ணை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் மாணவி ஒருவர் கேட்டுள்ளார். அப்போது பேராசிரியர் தன்னிடம் பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டார் என அந்த மாணவி குற்றம்சாட்டினார். இதையடுத்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பாதிக்கப்பட்ட மாணவி கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…