21ஆம் தேதி புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்..!

Published by
murugan

மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் (19)-ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்:

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட ம் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின்  கிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் – தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நீடிக்கும்.  மார்ச் 19 இல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடகிழக்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.

21-ஆம் தேதி புயல்: 

வங்கக்கடலில் மார்ச் 21-ஆம் தேதி புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 20-ல்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 21-இல் புயலாக வலுப்பெறும்.  21-ல் புயலாக உருவெடுத்து பின் வடக்கு- வடகிழக்கில்  நகர்ந்து வங்கதேசம்- மியான்மர் கரையோரத்தில் 22-ல் நிலைபெறும்.

4 நாட்களுக்கு எச்சரிக்கை:

இன்றும்,நாளையும் வங்கக்கடலில் தென்கிழக்கு, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மார்ச் 19, மற்றும் 20-ஆம் தேதி அந்தமான் கடல் பகுதி, வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். குறைந்தபட்சம் மணிக்கு 45 கி. மீ முதல் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

9 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

10 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

11 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

12 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

12 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

14 hours ago