21ஆம் தேதி புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்..!

Default Image

மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் (19)-ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்:

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட ம் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின்  கிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் – தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நீடிக்கும்.  மார்ச் 19 இல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடகிழக்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.

21-ஆம் தேதி புயல்: 

வங்கக்கடலில் மார்ச் 21-ஆம் தேதி புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 20-ல்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 21-இல் புயலாக வலுப்பெறும்.  21-ல் புயலாக உருவெடுத்து பின் வடக்கு- வடகிழக்கில்  நகர்ந்து வங்கதேசம்- மியான்மர் கரையோரத்தில் 22-ல் நிலைபெறும்.

4 நாட்களுக்கு எச்சரிக்கை:

இன்றும்,நாளையும் வங்கக்கடலில் தென்கிழக்கு, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மார்ச் 19, மற்றும் 20-ஆம் தேதி அந்தமான் கடல் பகுதி, வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். குறைந்தபட்சம் மணிக்கு 45 கி. மீ முதல் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசும் வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்