செய்தியாளர்களை அரசு குறிவைப்பதை நிறுத்த வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஹத்ராஸ் மாவட்டத்தில் நுழைவதற்கு செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் அரசியல் கட்சினருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து ஹத்ராஸ் பகுதிக்குள் நுழைய செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஹத்ராஸ் வழக்கில் உண்மையை வெளிக் கொண்டு வரும் செய்தியாளர்களை அரசு குறிவைப்பதை நிறுத்த வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேச அரசு செய்தியாளர் தனுஸ்ரீ பாண்டே மற்றும் எதிர்க்கட்சியினரையும் அங்கு செல்வதிலிருந்து தடுப்பதற்கு பதில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…