திமுக இன்னும் 5 வருடம் ஆட்சியில் இருக்கும் என கூறுவதை விட்டுவிடுங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Default Image

திமுக ஐந்து வருடம் அல்ல இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காட்டூர் பகுதி தொகுதியில் திமுக சார்பில் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நிகழ்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் கலைஞர் அவர்கள் எந்த திட்டத்தை தொடங்கினாலும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில்தான் தொடங்குவார். அதேபோல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களும் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தை காட்டூர் பாப்பா குறிச்சியில் தொடங்கினார்.

மக்களுக்கு தேவையான அனைத்தும் இன்னும் செய்வோம் செய்து காட்டுவோம் என்ற உத்வேகம் என்னிடத்தில் உள்ளது. சிலர் விமர்சனம் செய்வதை காதில் வாங்க வேண்டாம். வாக்களித்த நீங்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள் திமுக என்பது கட்சி கிடையாது; மக்களுக்கான இயக்கம். அதனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஆட்சியில் இருந்தபோதும் இல்லாவிட்டாலும் செய்வோம். தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை கொடுத்தும் தற்போது 250 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். திமுக ஐந்து வருடம் அல்ல இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்