நடு ரோட்டில் கல்லை வைத்து நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம கும்பல்

Published by
murugan

மதுரையை சார்ந்த திருநகர் பாண்டியன் நகரை சார்ந்த குமரகுருபரன் மகன் பாஸ்கரன். இவர் கே.கேநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த23-ம் தேதி தனது பணியை முடித்து விட்டு இரவு 12மணிக்கு தனது வீட்டிற்கு மோட்டர் வாகனத்தில் வந்து கொண்டியிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டில் கிடந்த கல் மீது மோதி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.காயமடைந்த பாஸ்கரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன் தினம் அதிகாலை 3மணிக்கு  சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதனை தொடர்ந்து ஆஸ்டின் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர் .விசாரணையில் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தனர். அப்போது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிசிடிவி வீடியோ காட்சியில் பாஸ்கரன் வரும் ரோட்டில் மர்ம நபர்கள் ஒளி குறைவான இடத்தில் ஒரு பெரிய கல்லை நடு ரோட்டில் வைத்து விட்டு செல்கிறார்கள். ரோட்டில் கல் இருப்பதை பார்த்த வேன் டிரைவர் கல்லை எடுக்க முயற்சி செய்தார்.ஆனால் அந்த மர்ம நபர்கள் வேன் டிரைவரை தடுத்து விடுகின்றனர்.

அதன் பின் அந்த வழியாக வந்த பாஸ்கரன் அந்த கல்லில் மோதி  படுகாயம் அடைந்தார்.அப்போது பாஸ்கரிடம் இருந்த  நகை ,பணம் மற்றும் போன் ஆகியவை பறித்து கொண்டு அந்த மர்ம நபர்கள் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

பின்பு ஆஸ்டின் பட்டி காவல்துறை விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றியது. மேலும் இந்த அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த மர்ம நபரை திருநகர் போலீசார் கைது செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர் தனக்கன் குளம் பகுதியில் உள்ள பர்மா காலனியை சார்ந்த ராஜா என்பது தெரிய வந்தது.மேலும் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: news

Recent Posts

தவெக கொடியில் யானை சின்னம்: தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்.!

தவெக கொடியில் யானை சின்னம்: தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்.!

சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…

20 mins ago

தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.. பிரதமர் வாழ்த்து.! மிதுன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி.!

டெல்லி:  ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர்…

22 mins ago

“தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர்”….பெயர் பலகை முதல் ட்வீட்டர் வரை அப்டேட் செய்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : தமிழக அரசியலில், பெரிய கேள்வியாக இருந்தது என்னவென்றால், ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்வி தான். இந்த…

48 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகிணி போட்ட பிளானை சொதப்பிய வித்யா..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் [செப்டம்பர் 30] முத்துவின் செல்லை வாங்கி சத்யா பற்றிய வீடியோவை வெளியிட…

1 hour ago

INDvsBAN : ரோஹித் சர்மா பிடித்த அசால்ட் கேட்ச்! ஷாக்கில் உறைந்த வங்கதேச பேட்ஸ்மேன்!

கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று…

2 hours ago

குக் வித் கோமாளி டைட்டில் வென்ற பிரியங்கா! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…

2 hours ago