13 பேர் விஷவாயு தாக்கி இறந்ததற்கான ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்! ஸ்டெர்லைட் விவகாரத்தில் திருப்பம்!

Published by
மணிகண்டன்

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று  நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்கள் அதிகாரம் இயக்கம் சார்பில், ஸ்டெர்லைட் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மக்கள் அதிகாரம் சார்பில் வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் பல்வேறு வாதங்களை முன்வைத்தார். முக்கியமாக, 2004 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு தாக்குதலால் 13 பேர் உயிரிழந்ததை குறிப்பிட்டார். மேலும், போராட்டத்தில் குழந்தைகள் ஈடுபட்டதால் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்,  ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேனர் வைத்ததவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளதாகும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, நீதிபதிகள் கூறுகையில், ‘பள்ளியில் ஏதேனும் விஐபிக்கள் வந்தால் பள்ளி குழந்தைகளை மலர்தூவி வரவேற்க கட்டாய படுத்து குறித்து சாடினார். மேலும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முக்கிய சாலைகளில் அதிகமான பேனர் வைத்துள்ளவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். முக்கியமாக சென்னை அண்ணா சாலையில் இரு பக்கமும் பேனர்  மட்டுமே உள்ளது. எனவும், புதிதாக ஊருக்கு வருபவர்கள் எப்படி சரியான முகவரிக்கு செல்வார்கள் என, கடிந்துகொண்டார்.

பின்னர் மக்கள் அதிகாரம் சார்பில் கூறப்பட்ட விஷவாயு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தது சம்பந்தமான ஆதாரங்களை மக்கள் அதிகாரம் தரப்பினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். என கூறினார். பின்னர், இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Recent Posts

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

7 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

23 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

26 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

32 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

37 mins ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

15 hours ago