ஸ்டெர்லைட் வழக்கு: முதல் தகவல் அறிக்கையின் நகல்களை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு

Published by
Venu

போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் ராஜ், மைக்கேல் ஜீனியஸ் மீது தொடரப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகல்களை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் குழு பரிந்துரை செய்ததையடுத்து தூத்துக்குடியில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.அதோடு இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது என்று சமீபத்தில் உத்தரவு வெளியிட்டது. வருகின்றது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய்வழக்கு போடுவதை நிறுத்த கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது , கடந்த 3 மாதங்களில் போராட்டம் நடத்த அனுமதி கூறியவர்கள் எவ்வளவு பேர் என்று விவரங்களை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி அளிக்க வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆஜரானார்.பின்னர்  உயர்நீதிமன்ற மதுரை கிளை,ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசினாலோ, சமூக வலைதளத்தில் தகவல் அனுப்பினாலோ குற்றம் என்றால், ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம் என பேசுவதும், சமூக வலைதளங்களில் தகவல் அனுப்பவதும் குற்றம் தானே? என்றும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும்  ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போடக்கூடாது கேள்வி எழுப்பியுள்ளது.  ஸ்டெர்லைட் போராட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? என்றும் போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் ராஜ், மைக்கேல் ஜீனியஸ் மீது தொடரப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகல்களை தாக்கல் செய்ய மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .அதேபோல் வழக்கு வரும் 14க்கு ஒத்திவைத்துள்ளது.

Published by
Venu

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago