கும்மிடிப்பூண்டி அருகே பாலத்தின் கீழ் பரிதாபமாக கிடந்த 17 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலத்தின் கீழ் 17 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஓரிடத்தில் சிலைகள் இருப்பதைக் கண்டனர்.
பின் இந்த சிலைகள் தொடர்பாக அவர்கள் தகவல் அளித்ததால் ஆரம்பாக்கம் காவல்துறையினர் விரைந்து வந்து 7 அம்மன் சிலைகள், ஒரு விஷ்ணு சிலை, ஒரு சிங்க சிலை, 2 நாக சிலைகள், ஒரு நந்தி சிலை, ஒரு மயில் சிலை, 2 பலிபீடங்கள், ஒரு ஐயப்பன் சிலை, ஒரு கருடன் சிலை என 17கற்சிலைகளை மீட்டனர்.
இந்தச் சிலைகளைக் கடத்தி வந்தவர்கள் இவற்றைப் பாலத்தின்கீழ் போட்டு விட்டுச் சென்றனரா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.தமிழக பாரம்பரியத்தை இப்படி பாலத்தில் போட்டு விட்டு ஒடிய கயவர்களின் செயல் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…