ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம் என முதல்வர் பேச்சு.
முன்னாள் அமைச்சர் பெங்களூரு பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் பல பிரச்சனைகள் உள்ளது. அதெல்லாம் இப்போது சொல்லமாட்டேன். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்.
விசாரணை அறிக்கையை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம், பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். இதைத்ததன் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். ஓபிஎஸ் சமாதானப்படுத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அப்போதைய முதல்வர் இபிஎஸ் அமைத்தார். எனவே, விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதுபோன்று தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டே என கூறியவர் இபிஎஸ் என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதும் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சி வந்தவுடன் ஆணையத்தை ஒழுங்குபடுத்தி விசாரணை நடைபெற்றது. சட்டமன்றத்தில் திமுக என்னென்ன வாக்குறுதிகள் அளித்தததோ அவைகளை நிறைவேற்றி வருகிறோம் என இவைகளை குறிப்பிட்டு முதலமைச்சர் கூறினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…