மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் ராஜேஷ்குமார், டாக்டர் கனிமொழி சோமு ஹொயோர் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு.
அதிமுகவின் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்ததை தொடர்ந்து காலியான அந்த இடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்திருந்தது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து, இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. வைத்திலிங்கத்தின் காலியிடத்திற்கு திமுக வேட்பாளர் ராஜேஷ்குமார், கே.பி.முனுசாமியின் காலியிடத்திற்கு திமுக வேட்பாளர் டாக்டர் கனிமொழி சோமு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 2 இடங்களுக்கும் சுயேச்சை வேட்பாளர் அக்னி ஸ்ரீராமச்சந்திரன், பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், புஷ்பராஜ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் ராஜேஷ்குமார், டாக்டர் கனிமொழி சோமு ஹொயோர் வேட்புமனு ஏற்கப்பட்டதாக சட்டமன்ற பேரவை செயலகம் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சுயேட்சை வேட்பாளர்கள் பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், புஷ்பராஜ் ஆகியோர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். திமுக கட்சி தவிர வேறு கட்சிகள் எதுவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் ராஜேஷ்குமார் மற்றும் டாக்டர் கனிமொழி ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…