மத்திய அரசு கொண்டுவந்துள்ள மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்விலிருந்து விலக்கு பெற மாநில அரசு உறுதியுடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருணாகரன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வெற்று அறிவிப்புடன் நிற்காமல் விலக்கு பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர் . ஆனால் , நீட் என்ற நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வந்ததும் கட் ஆப் மதிப்பெண் கணக்கெடுக்காமல் அனைவரும் நுழைவுத் தேர்வை எழுதும் சூழல் உருவானது.
இதனால் பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்கள் கூட தனியார் பயிற்சி நிலையங்கள் சென்று அதிகம் மதிப்பெண் எடுத்தனர். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கூறி வருகின்றனர். அனால் இதுவரை உறுதியான வகையில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…