அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை காலை ,மாலை என இரு வேளைகளில் அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில்,சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய கழக செயலாளர்கள்,நகர செயலாளர்கள் மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த பகுதி கழக செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.இன்று காலை நடைபெறும் இந்த கூட்டத்தில் கரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ,எதிர் வர உள்ள நகராட்சி,மாநகராட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…