மரணப் படுக்கையிலும் பதிப்பை தவமாக கொண்டு பணியாற்றியவர் க்ரியா என்று கூறி அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ் பதிப்புத் துறையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் தமிழ் பதிப்பாளரும் , தமிழ் நவீன அகராதியான க்ரியா பதிப்பின் உரியையாளருமாவர். சமீபத்தில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மரண படுக்கையிலும் சுவாச கருவி பொருத்தியவாறு அவர் தனது க்ரியா அகராதியின் 3-ம் பதிப்பினை திருத்தி , அதன் திருத்தப்பட்ட பதிப்பினை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் . 76 வயதான இவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார் . அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் தமிழ் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுவேதனையை தருகிறது. பதிப்பை தவமாக கொண்டு மரணப் படுக்கையிலும் பணியாற்றியவர். அவர் வெளியிட்ட ‘தற்காலத் தமிழ் அகராதி’ அரிய கருவூலம் . குடும்பத்தினர் மற்றும் தமிழ் பதிப்புலகத்தினர் அனைவருக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் .
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…