சென்னை ராயபுரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கடந்த 23-ம் தேதி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் வீடுகள் முன்பதாக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், சென்னை ராயபுரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘அண்ணே அண்ணே.. ஸ்டாலின் அண்ணே.. நம்ம ஊரு நல்ல ஊரு… இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே… அத சொன்னா வெட்கக்கேடு நான் சொல்லாட்டி மானக்கேடு’ என பாட்டுப்பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…