எந்த காலத்திலும் ஸ்டாலினால் ஆட்சியை தட்டி பறிக்க முடியாது – ஓபிஎஸ்

Default Image

மு.க. ஸ்டாலினால் எந்த காலத்திலும், நம்மிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க முடியாது.

புதுக்கோட்டையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை, அதிமுக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது  என்றும், உளவு செய்யும் நேரத்தில் ஊர் சுற்றிவிட்டு, வயலுக்கு அரிவாளோடு சென்ற கதையாக, ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எதையும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் அதிமுக அரசை பற்றி மு.க.ஸ்டாலின் வசைபாடி வருகிறார் என்றும், மு.க. ஸ்டாலினால் எந்த காலத்திலும், நம்மிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்