நாடே பற்றி எரிகிறது! அது தொடர்பாக பேரவையில் விவாதிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு!

Published by
மணிகண்டன்
  • புத்தாண்டிற்கு பிறகு முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியது.
  • இரண்டாவது நாளான இன்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

2020ஆம் ஆண்டு தொடங்கி முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவார் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் என எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டார்.  இதில் திமுகவினர் மற்றும் அதன் தோழமை காட்சிகள் நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதே போல இன்று இரண்டாம் நாள் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதிலும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேரவையில் விவாதம் கோரப்பட்டது. அதற்கு சட்டசபையில் அனுமதி கொடுக்கப்படாததால் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்கு பிறகு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுகையில், ‘ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தால் நாடே பற்றி எரிந்து வருகிறது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால்  விவாதம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் ‘ என்றவாறு ஸ்டாலின் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

47 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

19 hours ago