நாடே பற்றி எரிகிறது! அது தொடர்பாக பேரவையில் விவாதிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு!

Published by
மணிகண்டன்
  • புத்தாண்டிற்கு பிறகு முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியது.
  • இரண்டாவது நாளான இன்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

2020ஆம் ஆண்டு தொடங்கி முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவார் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் என எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டார்.  இதில் திமுகவினர் மற்றும் அதன் தோழமை காட்சிகள் நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதே போல இன்று இரண்டாம் நாள் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதிலும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேரவையில் விவாதம் கோரப்பட்டது. அதற்கு சட்டசபையில் அனுமதி கொடுக்கப்படாததால் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்கு பிறகு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுகையில், ‘ குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தால் நாடே பற்றி எரிந்து வருகிறது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால்  விவாதம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் ‘ என்றவாறு ஸ்டாலின் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் போப் ஆண்டவர் மறைவு வரை!

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் போப் ஆண்டவர் மறைவு வரை!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…

23 minutes ago

நிதியை நிறுத்திய டொனால்ட் டிரம்ப்! கோர்ட்டில் கேஸ் போட்ட ஹார்வர்டு பல்கலைக்கழகம்!

வாஷிங்டன் :  உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…

33 minutes ago

ஆண்ட்ரே ரஸ்ஸலை எப்படி யூஸ் பண்றீங்க? டென்ஷனாகி கேள்வி எழுப்பிய அனில் கும்ப்ளே!

கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…

2 hours ago

கூடுகிறது சட்டப்பேரவை…எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடும் செந்தில் பாலாஜி!

சென்னை :  கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…

2 hours ago

பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! நடந்தது என்ன?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…

3 hours ago

“தமிழக அரசே என்னை தான் ஃபாலோ பண்றாங்க.” சீமான் பரபரப்பு பேட்டி!

கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…

3 hours ago