ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக பேச பழகிக்கொள்ள வேண்டும் இல்லையெனில் இரத்த அழுத்தம் அதிகரித்து அவரின் உடல்நிலை பாதிக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுக தலைவர் ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக பேச பழகிக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை என்றும், முதலமைச்சரின் வெளிநாடு பயணம் என்பது முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக மட்டுமே. ஆனால், திமுகவினரின் வெளிநாட்டு பயணம் தான் சுய ஆதாயம் தேடும் பயணமாக இருந்துள்ளது.
வெளிநாட்டு பயணத்தில் துணை முதல்வர் கலந்து கொள்ளாததை பயன்படுத்தி எதிர்க் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம் .வெளிநாடு பயணம் வெற்றியடைய முதல்வரை அவரின் வீட்டிற்கே சென்று துணை முதல்வர் வாழ்த்தி தெரிவித்துவிட்டு வந்தார். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் .அதிமுக திமுகவை போன்ற கட்சி கிடையாது. எப்பொழுதும் மக்களுக்காகவே செயல்படும் கட்சி என்று தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…