அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் , பன்னீர்செல்வம் பங்கேற்பு

Default Image

பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்கின்றனர்.

லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில்  அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

எனவே இந்தியா – சீனா விவகாரம்  தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இந்நிலையில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் . அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்