தமிழகத்தின் இம்சை அரசன் ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விரும்பவில்லை.உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் மறைமுக பதவிகளிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்ற வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் சமூக நீதியை குழித்தோண்டி புதைத்தது திமுகவினர் தான்.
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு காரணம் ஜெயலலிதா. சமூக நீதி காத்த வீரங்கனை என ஜெயலலிதாவிற்கு திக தலைவர் வீரமணி பட்டம் வழங்கினார். இதையெல்லாம் ஸ்டாலின் மறந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பினார் .மேலும் தமிழகத்தின் இம்சை அரசன் முக ஸ்டாலின்.எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் தடுக்கிறார்  என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்