கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார்-பாஜக மூத்த தலைவர் பேச்சு

Default Image

கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து உள்ளது.ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் நிலை சற்று பரிதாபமாகதான் உள்ளது.தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டது.ஆனால் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்வியையே சந்தித்தது.

அதேவேளையில் கோவையில்  பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் .இந்த நிலையில் திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.அவர் பேசுகையில், கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் .மு.க.ஸ்டாலினின் உழைப்பு கருணாநிதியை போல எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்