கொளத்தூர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகத்தில் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி முடிந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுக சார்பில் கோடை காலத்தில் மக்களின் தாக்கத்தை தணிக்க தண்ணீர்பந்தல் அமைக்கவும், கொரோனாவின் 2-வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
ஆனால், வருகின்ற மே 2-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் நீடிப்பதால் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் அனுமதி கேட்டது. மக்கள் நலன் சார்ந்த திமுகவின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், அச்சம் தவிர்ப்போம் , அறிவியலால் வெல்வோம் என்ற பெயரில் சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் மற்றும் சோப்புகள் ஆகியவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…