காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 5ஆம் நாளான இன்று, வேளாங்கண்ணியில் இருந்து மு.க.ஸ்டாலின், நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
திருச்சி முக்கொம்புவில், கடந்த சனிக்கிழமை அன்று காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு, விவசாயிகள், பொதுமக்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். 5ஆம் நாளான இன்று, வேளாங்கண்ணியில் இருந்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.இன்றைய நாளின் முதற்பகுதியாக, வேளாங்கண்ணியில் இருந்து, பரவை, பாப்பாகோவில், நாகப்பட்டினம் வழியாக செம்பனார்கோவில் சென்றடைகிறார்.
அங்கு, விவசாயிகள், அரசியல் கட்சியினரை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். மு.க.ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணத்தில், திமுகவினர் மட்டுமின்றி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…