மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், வேண்டுமென்றே திட்டமிட்டு ,திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் பொய் அறிக்கைகளை வெளியிடுவது,வேண்டுமென்றே அவதூறாக பேசுவது ,இந்த அரசு மீது குறை சொல்வது,அமைச்சர்கள் மீது பழிசுமத்துவது என வாடிக்கையாக கொண்டுள்ளார்.ஆனால் அனைத்தையும் நிராகரித்து அதிமுக வெற்றி பெற வேண்டும். அவர் பேசுவது அத்தனையும் பொய்.இம்மியளவு கூட உண்மை கிடையாது. ஏனென்று சொன்னால், அவர்களுடைய முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.அதை மறைப்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு நமது அரசு மீதும்,அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்தி ,அவருடைய கட்சி தொண்டர்கள்,முன்னாள் அமைச்சர்கள்,நீதிமன்றத்திற்கு போகும் போது ,அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கத்திலே திட்டமிட்டு ,அரசியல் நாடகத்தை அரங்கேற்றி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.பொய் பேசுவதற்கு இன்றைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…