அரசியல் ஆதாயத்திற்காக குற்றச்சாட்டும் ஸ்டாலின் – அமைச்சர் காமராஜ் பளிச் பேட்டி.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஸ்டாலின் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது – அமைச்சர் காமராஜ்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கை பேசப்படக்கூடிய வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக குழுக்கள் அமைத்து துறைரீதியான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்ப்பதை உணவுத்துறை முறையாக செயல்படுத்தி வருகிறது என்றும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மக்களுக்கு கூடுதல் அரிசி வழங்க ரூ.438 கோடி நிதி ஒதுக்கி மத்திய தொகுப்பில் இருந்து அரிசி வாங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் மூலம் அரசியல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் பெறப்பட்ட 98 ஆயிரம் மனுக்களில் போக்குவரத்து வசதி குறித்து இடம் பெறவில்லை. அரசின் மீது குறைசொல்ல வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட மனுக்கள், ஸ்டாலின் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பொறுப்பில்லாமல் செயல்படக்கூடாது என்று குற்றசாட்டியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

7 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

8 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

8 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

9 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

9 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

10 hours ago