எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் 2 பேர் இளம் சிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியில் நேற்று அதிகாலை எஸ்எஸ்ஐ பூமிநாதன் ரோந்து பணியின்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மண்டல டிஐஜி சரவண சுந்தர், நவல்பட்டு குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தோம். 3 பேரை கைது செய்துள்ளோம். அதில் 2 பேர் இளம் சிறார்கள். வழக்கில் தொடர்புடைய பொருட்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகள் நடக்கின்றன. தடயங்கள் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்துள்ளோம். செல்போனில் எஸ்எஸ்ஐ பேசிக்கொண்டு இருந்தபோது பின் பகுதியில் இருந்து சிறுவர்கள் தாக்கியுள்ளனர். மணிகண்டன்தான் (19) முக்கிய குற்றவாளி, அனைவரும் போதையில் இருந்துள்ளனர். இதற்கு முன் இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை. காவலர்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
ஆதாரம் இல்லாமல் யாரையும் கொலைவழக்கில் கைது செய்யவில்லை. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இரவு நேரங்களில் இரண்டு, இரண்டு காவலர்களாக தான் இரவு ரோந்து பணிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…