எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமராஜர் ஆட்சியில் 1954-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பிறகு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட அய்யா திரு. எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் இன்று. அய்யா அவர்கள் 1952 முதல் திமுகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வன்னிய சமுதாயப் பெருமக்கள் அய்யாவுக்கு சிலை வைக்க சென்னையில் இடம் கோரிய போது, “இடம் மாத்திரமல்ல; சிலையும் அரசின் சார்பிலேயே நிறுவப்படும்’ என்று வெண்கலச் சிலையை 1996-இல் கிண்டியில் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்
இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினேன்.மேலும், 1969-ல் ஏ.என். சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இருந்த 25% இட ஒதுக்கீட்டை 1971-ல் 31% உயர்த்தியதும், பிறகு வன்னியர் மக்களின் கோரிக்கையை ஏற்று போராட்டம் ஏதும் இல்லாமலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கியதும் திமுகதான். அய்யா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பணிகளை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்கிறேன் அவர் புகழ் நீடுழி வாழ்க என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…