எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Default Image

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமராஜர் ஆட்சியில் 1954-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பிறகு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட அய்யா திரு. எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் இன்று. அய்யா அவர்கள் 1952 முதல் திமுகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வன்னிய சமுதாயப் பெருமக்கள் அய்யாவுக்கு சிலை வைக்க சென்னையில் இடம் கோரிய போது, “இடம் மாத்திரமல்ல; சிலையும் அரசின் சார்பிலேயே நிறுவப்படும்’ என்று வெண்கலச் சிலையை 1996-இல் கிண்டியில் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்

இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினேன்.மேலும், 1969-ல் ஏ.என். சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இருந்த 25% இட ஒதுக்கீட்டை 1971-ல் 31% உயர்த்தியதும், பிறகு வன்னியர் மக்களின் கோரிக்கையை ஏற்று போராட்டம் ஏதும் இல்லாமலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கியதும் திமுகதான். அய்யா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பணிகளை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்கிறேன் அவர் புகழ் நீடுழி வாழ்க என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்