திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில், கைதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. அங்கு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட 120 உள்ளனர். இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகள் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் சுமார் 80 இலங்கை தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் தங்களை பொய் வழக்கில் தமிழக போலீசார் கைது செய்துள்ளதாகவும், அந்த வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் தங்களை அகதிகள் முகாமில் அடைத்து உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். எனவே சட்டப்படி விடுதலை செய்ய வேண்டும் என்றும், தாங்கள் இந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கருணை கொலை செய்து விடுங்கள் என்றும் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து 10 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் விடுதலை செய்யப்படாமல் சிறப்பு முகாமில் உள்ள நிலையில். இலங்கை தமிழர்கள் 10 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ரமணன் என்பவர் வயிற்றை கத்தியால் கீறியும், நிப்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், மற்றும் சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டும், மரத்தின் மீது எறியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இதுதொடர்பாக 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…