நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களிடம் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3.5 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றுள்ளனர். நாகையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், ராஜா, சம்பந்தன் மற்றும் ராமகண்ணு ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 29ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே 30 மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஐந்து அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இவர்களை சுற்றி வளைத்து கத்தி பெட்ரோல் வெடிகுண்டு இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் படகில் ஏறி உள்ளனர்.
கழுத்தில் கத்தியை வைத்தவாரே அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் அத்தனையையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து உயிருடன் கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து நாகப்பட்டினம் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாகை மீனவர்கள் இன்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ் மணியனிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தங்களது வலைகளை மீட்டுத் தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…