சினிமாவில் நடிப்பதற்காக மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட இலங்கை கடத்தல் மன்னன்!

Default Image

சினிமாவில் நடிப்பதற்காக மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட இலங்கை கடத்தல் மன்னன்.

இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் காதலியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மதுரையில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடத்தல் மன்னன் லொக்கா சினிமாவில் நடிப்பதற்காக, ஜனவரியில் கோவை மருத்துவமனையில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கை மாற்றியுள்ளார். இந்த அறுவை சிகிச்சையை, அவர் பாலாஜி நர்சிங் ஹோம் மருத்துவமனையில் செய்துள்ளார் என்பதையும் சிபிசிஐடி கண்டுபிடித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்