நம் அண்டை நாடான இலங்கையில் தனி ஈழம் கேட்டு உள்நாட்டு போர் புரிந்த விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 1983-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது. இந்த போரின்போது, 2000-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 19ஆம் தேதி யாழ்ப்பாணம் மிருசுவில், ஞானபாலன் ரவீந்திரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பார்த்திபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞான சந்திரன், ஞானசந்திரன் சாந்தன், வில்வராஜா பிரசாத் ஆகியோரை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவ வீரர் சுனில் ரத்நாயகா என்பன் கொடூரமாக துடிதுடிக்க சுட்டுக்கொலை செய்தான். இது தொடர்பாக சுனில் ரத்நாயகா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில், அவனுக்கு மரண தண்டனை விதித்து 2015-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை இலங்கை உச்சநீதிமன்றமும் கடந்த ஆண்டு உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், சுனில் ரத்நாயகாவை விடுதலை செய்யுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தது குறித்து அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வாவிடம் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. எதையும் ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. மன்னிப்பு அளிக்கிற அதிகாரமும் அவருக்கு உள்ளது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…