அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என செல்லூர் ராஜு விமர்சனம்
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர் அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. அண்ணன் தம்பிகள் போல் ஒன்றுபட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரிகள் எதற்கும் அஞ்ச மாட்டோம். எங்கள் மேல் தூண் விழுந்தாலும் திரும்பி கொண்டு எரிவோம்.
எங்களை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.நம்பாவிட்டால் ஆற்றிலே விட்டுவிடுவோம். அதிமுகவை நம்பியவர்கள் கேட்டதில்லை. நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம் என தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஆகும் தகுதியில்லை. எதிர்க்கட்சி தலைவராக தான் தகுதி உண்டு. என தெரிவித்துள்ளார். 100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்வதற்காக ஆதார் அணைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என கிண்டலாக விமர்சித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…