அணில் அமைச்சர் ஆதார் அமைச்சராகி விட்டார் – செல்லூர் ராஜு

Default Image

அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என செல்லூர் ராஜு விமர்சனம் 

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர் அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது. அண்ணன் தம்பிகள் போல் ஒன்றுபட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பனங்காட்டு நரிகள் எதற்கும் அஞ்ச மாட்டோம். எங்கள் மேல் தூண் விழுந்தாலும் திரும்பி கொண்டு எரிவோம்.

எங்களை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.நம்பாவிட்டால் ஆற்றிலே விட்டுவிடுவோம். அதிமுகவை நம்பியவர்கள் கேட்டதில்லை. நம்பாமல் கெட்டவர்கள் தான் அதிகம் என தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஆகும் தகுதியில்லை. எதிர்க்கட்சி தலைவராக தான் தகுதி உண்டு. என தெரிவித்துள்ளார். 100 யூனிட் மின்சாரத்தை ரத்து செய்வதற்காக ஆதார் அணைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என கிண்டலாக விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்