கொரோனா பாதித்த கைதிகளுக்கு சிறை வளாகத்தில் சிறப்பு வார்டு!

Default Image

கைதிகளுக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புழல் சிறை வளாகத்திலேயே தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், இந்தியாவிலும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அத்துடன் சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 13,362 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு 113 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கும் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 கைதிகள் மற்றுமொரு தூய்மைப் பணியாளருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புழல் சிறை வளாகத்திலேயே நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் சேர்த்தால் மொத்தம் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh