சிறப்பு எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு.. 6 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Default Image

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது தேசிய புலனாய்வு முகமை.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ-ஆக பணியாற்றி வந்தவர், வில்சன். 57 வயதாகும் இவர், அங்குள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது, கடந்த ஜனவரி மாதம், 8ஆம் தேதி மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு செய்து, தேசிய புலனாய்வு முகமை விசாரணை தொடங்கியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் ஜனவரி 15ம் தேதி கைது செய்யப்பட்ட அப்துல் சமீம்,தவுஃபிக், காஜா மொஹிதீன், மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி ஆகிய ஆறு பேர் மீது செய்தது தேசிய புலனாய்வு முகமை, முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin