சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை பிடிக்க சிறப்பு திட்டம் – மேயர் பிரியா அறிவிப்பு.!

Default Image

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை பிடிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்தார்.

சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க ரூ.1.35 கோடி மதிப்பில் 5 வாகனங்களும், நாய்களை பிடிக்க  ரூ.60 லட்சம் மதிப்பில் 6 புதிய வாகனங்களும் கொள்முதல் செய்யப்படும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த சுகாதார பணியாளர்களுக்கு நவீன வெக்டார் கன்ட்ரோல் கருவிகள் வழங்கப்படும் எனவும், தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, முக்கிய நகரப் பகுதிகளில் அதிக மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்