அதிமுகவின் 50ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் 50 ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் பல உயரங்களைத் தொட வேண்டும் என்பதற்காகவும், தீய சக்தியிடமிருந்து இந்த நாட்டையும், மக்களையும் காட்டாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர். அவர்களால் 16 லட்சம் தொண்டர்களோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.
இதன்பின் அம்மா அவர்களின் அயராத உழைப்பால் ஒன்றரைக் கோடித் தொண்டர்களைக் கொண்ட மிகப் பெரிய இயக்கமாக, எஃகுக் கோட்டையாக தற்போது 50-வது ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறது.
அதிமுகவின் பொன்விழா ஆண்டை சீரோடும், சிறப்போடும், எழுச்சியோடும் தமிழகம் மட்டுமல்லாமல், கழகம் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும், பார் போற்றும் பெருவிழாவாக, மிக விமரிசையாக, மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை வழங்கிக் கொண்டாட இக்கூட்டம் தீர்மானிக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…